திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்தி 73 ஆயிரத்தி 085 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 89,907 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 80 ஆயிரத்து 703 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2475 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.