பெரியபாளையம் போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினராக உள்ளார். இவரை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சமூக வளைதளத்தில் இழிவாக பேசியுள்ளார். இது குறித்து முருகன் அந்த நபரை சந்தித்து, தன்னை பற்றி இழிவாக பேசியது குறித்து கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் முருகனை தாக்கி, இழிவாக பேசியதாக  கூறப்படுகிறது.

இது குறித்து முருகன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், பெரியபாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று பெரியபாளையம் போலீசாரை கண்டித்து, வட்ட செயலாளர் தமிழ் அரசு தலைமையில் மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ஏ.ஜி.கண்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் பெரியபாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையறிந்த பெரியபாளையம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், பெரியபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: