புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கில், “ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் கிடையாது. அதனால் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த புதிய சட்ட வரையறைகளை உருவாக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களில் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.