இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முத்தரசன் அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மற்றும் 11ம் தேதி ஆகிய 2 நாட்கள் காணொலி மூலம் நடைபெறும் என்று மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆகஸ்ட் 10, 11 தேதிகளில்  காணொலி வழியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் 10ம் தேதியும், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 11ம் தேதியும் காணொலி மாநாடு வழியாக நடைபெறும்.

கொரானா நோய் பெருந்தொற்று, மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவுகளால் ஏற்பட்டுள்ள தொழில் மற்றும் வாழ்க்கை நெருக்கடிகள், மாநில உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைகள், விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு எதிரான சட்டங்கள், தமிழ்நாடு அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: