சென்னை: அதிமுகவில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெறுவதாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி ஆகிய அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெறும்.