இளைஞர், இளம் பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெறுவதாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி ஆகிய அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெறும்.

மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கண்ட அமைப்புகளுக்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை தலைமை கழகத்தில் இருந்து பெற்று, உறுப்பினர்களை சேர்த்து, உரிய கட்டண தொகையுடன் சேர்ப்பிக்க வேண்டும்.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட அனைவரும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் முழுமையாக ஈடுபட்டு, உரிய காலத்திற்குள் செய்து முடித்திட வேண்டும்.

Related Stories: