கோவை: தமிழகத்தில் ஆடி மாதத்தில் வரும் 18ம் நாள் ஆடிபெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆடி பெருக்கு நாளில் பொதுமக்கள் ஆற்று படுகைகளில் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வழிபாடு செய்வது வழக்கம். கோவை பேரூர் படித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருக்கு நாளில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபடுவர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக நீர்நிலைகளில் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.