கர்நாடகா முதல்வருக்கு கொரோனா டிவிட்டரில் தகவல்

பெங்களூரு: தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன் வாரிலால் புரோகித் ஆகியோர் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதி்க்கப்பட்டார். இது குறித்த அவரது டிவிட்டர் பதிவு: நான் கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று உறுதியானது. எனவே நான் டாக்டர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் உள்ளேன். ஆகவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்யவதுடன். 14 நாள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.

Related Stories: