பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள திறந்த வெளியில், பல ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான மைதானம் ஏற்படுத்தப்பட்டது. அங்கு ஊஞ்சல், இரும்பு பார், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தினமும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதை தொடர்ந்தனர்.
ஆனால், விளையாட்டு மைதானம் நாளடைவில் போதிய பராமரிப்பின்றி போனதால் ஆங்காங்கே புதர்சூர்ந்த இடமாக மாறியது. அதுமட்டுமின்றி, அங்கு அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி, அதனை மாற்றியமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது.