சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகம் அதிகமாக இருந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை 4 அமைச்சர்கள் உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.