போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்தாரா? நெல்லையில் பரபரப்பு

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (54). இவர் நெல்லை மாநகர போலீசில் ஹைவே பேட்ரோல் வாகனத்தில் எஸ்ஐயாக உள்ளார். இவர் கடந்த 25ம்தேதி இரவு 9 மணிக்கு பணி முடிந்து பைக்கில் பாளை

சீவலப்பேரி சாலை வழியாக திரும்பிக்கொண்டிருந்தார். பாளை கிருபாநகர் அருகே சென்றபோது, திடீரென சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த நடுவக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் (35) நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசில் சண்முகத்தின் மனைவி கல்லத்தி புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி எஸ்ஐ ஐயப்பன் மீது 279, 304ஏ பிரிவுகளின் கீழ்

விபத்து வழக்கினை பதிவு செய்தனர். இதனிடையே நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்த சண்முகத்தின் உறவினர்கள், போலீசார் தாக்கியதால்தான் அவர் இறந்தார் என கூறி ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகர போலீஸ் துணை கமிஷ னர் சரவணன், அவர்களிடம் நட ந்த விவரங்களை எடுத்து கூறி எஸ்ஐ மீது விபத்துக்கு வழக்குப்பதியப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதன்பின் அனை வரும் கலைந்து சென்றனர்.

Related Stories: