புதுடெல்லி: நாடு முழுவதும் 56 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதி உட்பட 57 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகள் உட்பட 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதி உட்பட 8 இடங்களுக்கு செப்டம்பர் 7ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இவற்றுக்கு நடக்க இருந்த தேர்தல், கொரோனா பரவல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை காரணம் காட்டி நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.