காஞ்சிபுரம் அருகே வானில் பறந்த காகங்கள் திடீர் உயிரிழப்பு.! பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வானில் பறந்துக்கொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் 15 காகங்கள் மயங்கி கீழே விழுந்தன. அங்கு இருந்தவர்கள் அந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுத்தும் சிறிது நேரத்தில் காகங்கள் உயிரிழந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அங்கு இருந்தவர்கள் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: