புவனேஸ்வர்: மழை மற்றும் குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது கொரோனா பரவல் தீவிரமடையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒடிசாவில் உள்ள ஐஐடி புவனேஸ்வர் மற்றும் எய்ம்ஸ் ஆய்வாளர்கள், இந்தியா தட்பவெப்பநிலைகளில் கொரோனா வைரசின் பரவல் குறித்து ஆய்வு நடத்தினர். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 28 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவு குறித்து ஐஐடி உதவி பேராசிரியர் வினோஜ் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலில் தட்பவெப்ப நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வெப்பமான தட்பவெப்ப நிலையில் இதன் பரவல் குறைவாகவே இருக்கும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் போது, 0.99 சதவீத பாதிப்பு குறையும், இரட்டிப்பாகும் கால அளவில் 1.13 நாட்கள் அதிகரிக்கும்.