சென்னை: கொரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் சமூகத்திற்கு உதவும் வகையில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சார்பில், சென்னை அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிஆர்டியின் மேலாண்மை இயக்குனர் ஜி.ஆர்.‘ஆனந்த்’ அனந்த பத்மநாபன் கூறுகையில், ‘‘அடையாறு புற்றுநோய் மையமும், சங்கர நேத்ராலயாவும் பின்தங்கிய நிலையில் உள்ள எளியோருக்கு கட்டணம் இல்லாமல் சேவை மனப்பான்மையில் சிகிச்சை அளித்து வருகின்றன.