விழுப்புரம்: செஞ்சி அருகே 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், தம்பிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கி விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செஞ்சியை அடுத்த நாகலாம்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு தனது தம்பியுடன் இணைந்து நல்லான்பிள்ளைபெற்றான் கிராமத்தை சேர்ந்த சேகர் மற்றும் அவரது மகள் லாவண்யா, அவளுடைய காதலன் சிதம்பரனை கொடூரமாக எரித்து கொன்றனர். இது தொடர்பான தகவலை முருகனின் மகள் பார்கவி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன், அவரது மனைவி, தம்பி மதியரசு ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.