அறந்தாங்கி: மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் 107 வயது முதியவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதுபற்றிய விவரம் வருமாறு; புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பெருமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. இவருக்கு 107 வயது ஆகிறது. இவரது மனைவி செல்லம்மாள். தம்பதிக்கு காளிமுத்து, ரத்தினம், நாராயணசாமி மற்றும் கோவிந்தசாமி என்ற 4 மகன்கள். பத்மாவதி, சிவயோகம் மற்றும் பிரேமாவதி என்ற 3 மகள்கள். இதில் காளிமுத்து, பத்மாவதி ஆகியோர் இறந்துவிட்டனர். இவரது குழந்தைகளில் ரத்தினம் தவிர மற்றவர்கள் பணியின் நிமித்தமாக வெளியூர்களில் நிரந்தரமாக தங்கிவிட்டனர்.