சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் மக்கள் கடலின் நடுவே 1989ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தொடங்கப்பட்ட சமூக ஜனநாயக இயக்கமான பாமக, வரும் 16ம் தேதி 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனக்கு இன்னும் சில நாட்களில் 81 வயது நிறைவடையப் போகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. ஆனால், நாம் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகளோ ஏராளமாக உள்ளன.