டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து 553,471 பேர் குணமடைந்தனர். ஒரே நாளில் கொரோனாவுக்கு 500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.