புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று ஊரடங்கு நடவடிக்கை காரணமாக பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு நவம்பரில் வகுப்புக்கள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ெகாரோனா பாதிப்பால், எம்பிபிஎஸ் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகள் நடத்துவதும் தொடர்ந்து தாமதமாகி வருகின்றது. புதிய அட்டவணையின்படி, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு அமைப்பானது ஜேஇஇ மெயின் தேர்வுகளை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அதே மாதம் 10 அல்லது 11ம் தேதி வெளியிடப்படும். இந்த நடைமுறைக்கு பின்னர் பிடெக் பிரிவில் சேர்வதற்கான கவுன்சிலிங் மற்றும் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு நடவடிக்கை தொடங்கும்.