2 போலீசாருக்கு கொரோனா தொற்று திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மூடல்

திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், போலீசார் உட்பட 38 பேர் பணியில் உள்ளனர். இதில், ரைட்டர் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஆகியோருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மற்ற போலீசாருக்கு நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள்  தெரியவில்லை.இதையடுத்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீஸ் நிலைய நுழைவாயில் கேட் மூடப்பட்டு பூட்டு  போடப்பட்டது. போலீசார் மற்றும் பொதுமக்கள் யாரும் போலீஸ் நிலையத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக டோல்கேட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: