செமஸ்டர் தேர்வுகள் நடத்த அனுமதி

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி, இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்வின் போது முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories: