கொல்கத்தா: கொல்கத்தாவில் கொரோனா பாதித்த முதியவரின் உடலை குடும்பத்தினர், 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கொல்கத்தாவில் உள்ள அம்ஹெர்ஸ்ட் தெருவை சேர்ந்த 71 வயது முதியவர், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த திங்களன்று மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் பரிந்துரைக்க, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த முதியவரின் உடல்நிலை மோசமடைந்து மரணடைந்து விட்டார். இதைத்தொடர்ந்து, தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை அணிந்த படி அந்த முதியவரின் குடியிருப்புக்கு வந்து மருத்துவர் பார்வையிட்டுள்ளார். எனினும், அவர் இறப்புச் சான்றிதழ் வழங்க மறுத்து, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதால் உள்ளூர் போலீஸை தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினரை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதித்த முதியவரின் உடலை 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த குடும்பத்தினர்: கொல்கத்தாவில் சோகம்!
- குடும்பங்கள்
- பிரேத
- கொல்கத்தா
- மனிதனின் உடலை ஐஸ்கிரீம் உறைவிப்பான் வைத்திருக்க கொல்கத்தா குடும்பம் கட்டாயப்படுத்தியது