ஊட்டி: ஊட்டியில் அனைத்துக் கட்சிகூட்டம் நேற்று நடந்தது. இதில். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: சாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை மிரட்டிய புகாருக்கு ஆளான தூத்துக்குடி ஏஎஸ்பி. குமார் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒருவரை நீலகிரி மாவட்டத்திற்கு நியமித்திருப்பதை இக்கூட்டம் கண்டிக்கிறது.