ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி உட்பட 3 தீவிரவாதிள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று காலை மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் இரண்டு பேர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் ஒருவன் மாவட்ட கமாண்டர் ஆவான். மற்றொருவன் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் மசூத்.