செங்கல்பட்டு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சீல் வைக்கப்பட்ட வீட்டை உடைத்து 10 சவரன் நகை, பைக் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.செங்கல்பட்டு அடுத்த கோகுலாபுரத்தில் வசிக்கும் 45 வயதுள்ள ரியல் எஸ்டேட் அதிபர், அவரது மனைவி, 2 பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.