சொல்லிட்டாங்க...

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர்ப்பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர்தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்திய, சீன எல்லையில் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லையை பாதுகாப்பதில் மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட முடியாது.

-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

தமிழ்நாடு, புதுவை மாணவர்களை போலவே பிற மாநிலங்களில் தமிழ்வழி பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

ஊரடங்கு அமலில்

இருப்பதை காட்டி எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை அரசு முடக்கி வைத்து, ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகிறது.

-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories: