ரவுடி கொலையில் கைதான வாலிபருக்கு குண்டாஸ்

திருவள்ளூர்: திருமழிசையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் கைதான வாலிபரை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த திருமழிசை உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் மகன் எபி (எ) எபினேசன்(28). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு, அதே பகுதியை சேர்ந்த, 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆனந்தன்(38) என்பவரை கொலை செய்த வழக்கில் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே இரு கொலை வழக்குகள், இரு வழிப்பறி வழக்குகள் உள்ளது. இதையடுத்து எபிநேசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, எஸ்பி அரவிந்தன் பரிந்துரை செய்தார். எபிநேசனை சிறையில் அடைக்க கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை புழல் சிறை கண்காணிப்பாளரிடம் வெள்ளவேடு போலீசார் நேற்றுமுன்தினம் ஒப்படைத்தனர்.

Related Stories: