திருவள்ளூர்: திருமழிசையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் கைதான வாலிபரை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த திருமழிசை உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் மகன் எபி (எ) எபினேசன்(28). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு, அதே பகுதியை சேர்ந்த, 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆனந்தன்(38) என்பவரை கொலை செய்த வழக்கில் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.