செயின்ட் லூசியா: கரீபியன் பிரிமீயர் லீக் (சிபிஎல்) டி20 தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு சிபிஎல் தொடர் பூட்டிய அரங்குகளில் ரசிகர்கள் இல்லாமல் டிரினிடாட் மற்றும் டொபாகாவில் மட்டும் நடைபெற உள்ளது. ஆக.18ம் தேதி முதல் செப் 10ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் 6 அணிகள் விளையாட உள்ளன. செயின்ட் லூசியா அணியில் இடம் பெற்றுள்ள கேல் (40), ‘தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு சிபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன்’ என்று திடீரென அறிவித்துள்ளார். ‘எனது விலகல் குறித்து செயின்ட் லூசியா அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டேன். ஊடரங்கு காரணமாக என் குடும்பத்தினைரை சந்திக்க முடியவில்லை.