புனே: புனே அருகே ஐஎன்எஸ் சிவாஜி போர்க்கப்பலில் 12 பயிற்சி மாலுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் லோனவாலா பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் சிவாஜி போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் 157 பயிற்சி மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை உறுதி செய்துள்ளது. அதன் செய்திக்குறிப்பில், ‘கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பிய பயிற்சி மாலுமிகள் ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினர். கப்பலுக்கு திரும்பிய அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.