விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கை, கால் செயிலிழந்த தங்கையுடன் வந்த பெண்ணை வாசலிலேயே பாதுகாவலர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் சுலோச்சனா(50). இவரது தங்கை லட்சுமி(45). மாற்றுத்திறனாளியான இவர் கை, கால் செயலிழந்து நான்கு சக்கர வீல் சேரில் மட்டுமே செல்ல முடியும். நெல்லையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்த இவர்கள், சென்னை செல்ல இ-பாஸ் வாங்க விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். நேற்று தனது தங்கை லட்சுமியை வீல்சேரில் தள்ளிக்கொண்டே கொளுத்தும் வெயிலில் சுலோச்சனா ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தாங்கள் சென்னை செல்வதற்கு உதவும்படி ஆட்சியரை சந்திக்க வந்ததாக நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர்களிடம் தெரிவிக்க, அவர்களோ கொரோனா நேரத்தில் யாரையும் சந்திக்க முடியாது.