அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப்போகிறது, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழிசை சொன்ன குற்றச்சாட்டை தான் நாங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளோம். குற்றவாளிகளை பாஜ சேர்த்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். அதற்கு இப்போது தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். பாஜவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் பாமக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு தானே தவிர பாஜ தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை. எங்களுடைய வாக்கு வங்கி என்றைக்குமே குறையாது. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டால் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர் நிறைவேற்றி உள்ளார்: அமைச்சர் ரகுபதி பெருமிதம் appeared first on Dinakaran.