சிவகங்கை : கீழடியில் புதிதாக துருத்தியுடன் சிறிய ரக உலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்.19ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 6ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் நடந்து வருகிறது. கீழடியில் இதுவரை கருப்பு-சிவப்பு வண்ண பானைகள், பானை ஓடுகள், விலங்கின் எலும்பு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 5வதாக தோண்டப்பட்ட குழியில் துருத்தியுடன் கூடிய (இரும்பு உள்ளிட்ட பொருட்களை உருக்க, எரியும் நெருப்பிற்கு காற்று அடிக்கும் அமைப்பு) மினி உலைகலன் கண்டறியப்பட்டுள்ளது.