திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,168 ஆக உயர்வு கண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க இன்று நள்ளிரவு முதல் 12 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தான், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, சென்னையை ஒட்டியுள்ள பகுதி, பூவிருந்தமல்லி, திருநின்றவூர், திருமயிலிசை, செங்குன்றம், அம்பத்தூர் உள்ளிட்ட பல மண்டலங்களிலும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.