திருவனந்தபுரம்: மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி சபரிமலை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். கொரோனா பரவலாம் என்பதால் சபரிமலை கோயில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களில் பூஜைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் தளர்த்தப்பட்டு ஜூன் 8 ம் தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.