ஷ்ரூஸ்பரி: இந்திய காலனி ஆதிக்கத்தின் விதையாக கருதப்படும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவின் சிலையை இங்கிலாந்தில் உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கில் அமைந்துள்ள ஷ்ரூஸ்பரி என்ற இடத்தில் ராப்ரட்டின் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை அகற்றக்கோரி எம்.பி.க்கள் உள்பட 1,700க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு அரசுக்கு மனு அளித்துள்ளனர். இந்த சிலை கிளைவ் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பனி நிர்மாணிக்கப்பட்ட நேரத்தில் வங்காளத்தில் ஆளநராக இருந்தவர் ராபர்ட் கிளைவ். இவர் வங்காளத்தில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்களை இங்கிலாந்துக்கு கடத்திச் சென்றார் என்பது புகார் ஆகும்.