மெக்சிகோ: கொரோனா ஊரடங்கு தளர்வால் மெக்சிகோவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதால் கல்லறை தோட்ட பணியாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் உயிரிழப்புகள் கூடி கொண்டே செல்லும் மெக்சிகோவில் இன்று புதிதாக 340 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இதையடுத்து அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 511 ஆக உயர்ந்துள்ளது. கல்லறைகளில் பிணங்கள் குவிந்து கொண்டே செல்வதால் அங்கு பணிபுரிபவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். வைரஸ் தொற்று தீவிரமடைந்த பின்னர் மருத்துவமனையை நாடுவதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.