டெல்லி: 4,286 ஷ்ராமிக் ரயில்கள் மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ரயில்களுக்கான தேவை ஒரு நாளுக்கு 250 என்ற அளவில் இருந்து 137ஆக குறைந்துள்ளது எனவும் கூறினார்.