சென்னை: பாஜக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு ₹6 லட்சம் அபராதம் விதித்து புதுடெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அதிமுக ராஜ்யசபை எம்பி சசிகலா புஷ்பா (தற்போது பாஜகவில் உள்ளார்) டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தன்னையும் மற்றொரு நபரையும் இணைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. இதனால், தனது மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த புகைப்படத்ைத சமூக வலைத்தளத்திலிருந்து நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதி ராஜிவ் சகாய் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் தனது புகைப்படத்தை யார் மார்பிங் செய்தார் என்று தெரிவிக்கவில்லை.