திருமயம்: அரிமளம் அருகே விவசாய நிலத்தில் புகுந்து சேதப்படுத்தும் எலிகளை கொல்ல வைத்த பூச்சி மருந்தை தின்ற 13 மயில்கள் பரிதாபமாக இறந்தன. விஷம் வைத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே சத்திரம் அழிஞ்சி கண்மாய் பகுதியில் ஒரு பெண் மயில் உட்பட 13 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரனையில் அழிஞ்சி கண்மாய் கரையை ஒட்டியுள்ள பகுதியில் சீகம்பட்டியை சேர்ந்த காசிநாதன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.