மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை சாலையில் நெல் அறுவடை வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால், நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு

சிவகங்கை: மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை சாலையில் நெல் அறுவடை வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால், நிறைமாத கர்ப்பிணியான 21 வயது பெண் உயிரிழந்தார். சாலையில் மின்சாரக் கம்பி தாழ்வாக இருந்ததால், அறுவடை வாகனத்தை அதன் ஓட்டுநர் திடீரென பின்னோக்கி இயக்கியுள்ளார். பின்னால் தனது சகோதரர் உடன் பைக்கில் அமர்ந்திருந்த சோனியா காந்தி (21) மீது, அறுவடை வாகனம் மோதி அவர் பலத்த காயம்டைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: