திருமலை: தெலங்கானா, சங்கா ரெட்டி மாவட்டத்தில் பாதான்சேருவை சேர்ந்தவர் மங்கலி கோவர்தன். இவரது மனைவி நவீனா. இவர்களது 3வது மகன் சாய் வர்தன். கோவர்தன் குடும்பத்தினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மேதக் மாவட்டம், போட்சனாபல்லி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில், கோவர்தனின் மாமா பிட்சாதிபதிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களை பார்ப்பதற்காக நேற்று கோவர்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றனர். இதற்கிடையே, பிட்சாதிபதி விவசாயத்திற்காக தனது நிலத்தில் ஏற்கனவே இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீர் வராததால் மீண்டும் நேற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.