மும்பை: மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணியில் இருந்து கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு விலகிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார். இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் தாக்கரே அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையே ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தாக்கரே அரசை கவிழ்க்க, ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பாஜ கையில் எடுத்துள்ளது.