டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தல் விதிகளை புறக்கணித்து சென்றதாக தகவல்

டெல்லி: டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கொரோனா முன்னெச்சரிக்கையின் தனிமைப்படுத்தல் விதிகளை தவிர்த்துவிட்டுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 60 நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கிற்கு  பின்னர் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளின்படி, உள்நாட்டு விமானங்களின் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அனைத்து மாநிலங்களும் பிற மாநிலங்களில் இருந்து தங்கள் மாநிலங்களுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக அரசு அறிவித்துள்ள விதிமுறையின்படி மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் விமானப் பயணிகள் 7 நாட்கள் நிர்வாகத் தனிமையில் இருக்க வேண்டும். பின்னர் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெல்லியில் இருந்து பெங்களூருக்கு பயணிகள் விமானத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வருகை தந்தார். அவர் பெங்களூரு வந்தவுடன் அவர் தனது அரசு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் கர்நாடக அரசின் எந்தவித தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. மேலும் இந்த நடவடிக்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு விளக்கமளித்த கவுடா, தான் மத்திய அமைச்சர் என்பதால் தனக்கு விதிமுறைகள் பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

Related Stories: