மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே வனத்துறையினர் அமைத்த தொட்டியில் தண்ணீர் குடித்து வன விலங்குகள் தாகம் தீர்த்து செல்கின்றன. மேட்டுப்பாளையம்,சிறுமுகை, காரமடை உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. கோடை காலத்தில் நீராதாரங்கள் வறண்டு போகும் என்பதால் இவ்வனப்பகுதிகளில் வனத்துறையினர் ஏராளமான செயற்கை தொட்டிகளை அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை ஓடந்துறையில் உள்ள வனத்துறை மர கிடங்கு வளாகத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்வதற்காக வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டாக பராமரிக்கப்பட்டு வருகிறது.