லூதியானா: இந்தி, பஞ்சாபி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், பிரபலமான மகாபாரத நடிகருமான சதீஷ் கவுல் வறுமையில் வாடும் தனக்கு மருந்து மற்றும் மளிகைப் பொருட்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ``பியார் தோ ஹோனா ஹி தா’’, ``ஆன்டி நம்பர் ஒன்’’, ``விக்ரம் ஆர் பீடல்’’ போன்றவை உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ் கவுல் (73). இவர் மகாபாரதத்தில் இந்திரன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது வறுமையில் வாடும் இவர் முதியோர் இல்லத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.