ஸ்ரீபெரும்புதூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (45). கன்டெய்னர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் அன்பு, சென்னையில் இருந்து காப்பர் காயிலை லாரியில் ஏற்றி கொண்டு ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் இறக்கினார். பின்னர் இரவு சென்னைக்கு புறப்பட்டார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அருகே, விட்டுவிடாகை என்ற இடத்தில், நள்ளிரவில் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு படுத்து தூங்கினார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், அவரை எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதனால் அவர்களுடன் அன்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.