பண்ருட்டி: பண்ருட்டி அருகே இருளர் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் அனுமதி மறுத்ததால் 3 கி.மீ தூரம் சுமந்து சென்று ஏரியில் அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக பழங்குடியினத்தை சேர்ந்த இருளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வருபவர் பாலு. இவரது மனைவி வள்ளி (45) சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நோய் குணமடையாத நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் வள்ளி இறந்தார்.