சென்னை: விதிமுறைகளுக்கு உட்பட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள கேன்டீன்கள் திறக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் கூட்டுறவு கேன்டீன்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், உணவு, டீ, காபி ஆகியவை பார்சல் மூலமே வழங்கப்படும். டீ, காபி ஆகியவை டம்ளரில் வழங்கக் கூடாது. உணவகம் திறக்கக் கூடாது. ஆனால் பார்சலில் உணவு வழங்க அனுமதி உண்டு. விற்பனை செய்யும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.