மோடிக்கு காங். மக்களவை தலைவர் திடீர் பாராட்டு

புதுடெல்லி: கொரோனாவால் வெளி மாநில தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து, சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பல இடங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்காக மத்திய அரசு சிறப்பு ரயிலை இயக்கினாலும், அதற்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரசின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘300 சிறப்பு ரயில்கள் மூலம், வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திரும்பி அனுப்பும் உங்களின் தீவிர முயற்சியை பாராட்டுகிறேன். தற்போது தொழிலாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர். எனவே, அவர்கள் டிக்கெட் கட்டணமின்றி இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: