ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதிச்சுற்று தள்ளிவைப்பு

துபாய்: கொரோனா தொற்று காரணமாக  இலங்கையில் நடைபெற இருந்த  மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டி தள்ளி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை தொடர் 2021 பிப்.6 - மார்ச் 7 வரை நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.  மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டியில் விளையாட ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய 3 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று இலங்கையில்   இந்தாண்டு ஜூலை 3-19 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ், ஜிப்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், பப்புவா நியூகினியா, தாய்லாந்து, அமெரிக்கா, இலங்கை என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று பீதி காரணமாக இந்த தகுதிச் சுற்றுப் போட்டியை தள்ளி வைப்பதாக ஐசிசி நேற்று அறிவித்தது.

Related Stories: