துபாய்: கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டி தள்ளி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை தொடர் 2021 பிப்.6 - மார்ச் 7 வரை நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டியில் விளையாட ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.